வெள்ளித்திரை நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் தற்போது பிரபலமடைந்து வருகின்றனர். சொல்லப் போனால் சின்னத்திரை நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா, மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளார். அவருக்கு திருமணம் ஆக உள்ள நிலையில் அவரது வருங்கால கணவரின் பிறந்தநாளையொட்டி கேக் கட் செய்து கொண்டாடியுள்ளார். அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சித்ரா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பவர் தான் சித்ரா. முதலில் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்பொழுது முல்லையை அனைவர்க்கும் பிடித்திருந்தாலும் அந்த அளவிற்கு அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.
மேலும் பல சேனல்களில் நடித்து இருக்கிறார் சித்ரா. அவர் வேலை பார்க்காத சேனலே இல்லை என்று சொல்லலாம். அதன் பிறகு சிறுசிறு கதாபாத்திரத்தில் ஒரு சில சீரியலில் நடித்திருந்தார் நம்ம சித்ரா. 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டார்ஸில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் துறுதுறுவென இருக்கும் பெண்ணாக இருப்பார் முல்லை. பல எதிர்பாராத திருப்பங்களால் கதிருக்கு மனைவியாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. நாளைடைவில் மோதலில் ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கை பயணம் தற்போது காதலில் முடிந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை – கதிருக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் உண்டு. அந்த அளவிற்கு முல்லை கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. தற்போது சித்ராவிற்கு நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் கல்யாண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் தனது வருங்கால கணவருடன் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படத்தையும் வெளியிட்டார். தற்போது அவரது வருங்கால கணவரின் பிறந்தநாளையொட்டி கேக் கட் செய்துள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.