தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆங்கில தேர்வில் வினாக்கள் பாடத்திட்டத்தின் வெளியின் இருந்து கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
புத்தகத்தில் இல்லாத வினாக்கள்..!
தேர்வு எழுதிய மாணவர்கள் இதுகுறித்து கூறுகையில், தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்கள் புத்தகத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும் தேர்வறையில் மாணவர்கள் கேள்விகளை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பினர். போட்டித்தேர்வுகளில் கேட்பது போன்று வினாக்கள் இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாடத்தேர்வில் இல்லாத வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் இன்னும் தமிழக பள்ளிகளில் கற்றல் திறனை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் கேள்விகள் கேட்பது மாணவர்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும் என்பதே பலரின் கருத்து.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |