தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இன்று தொடங்கி அடுத்த 6 நாட்களுக்கு (நவ.17 வரை) இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளி அன்று மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
சென்னை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் 17ம் தேதி வரை, ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இத்தகைய வானிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் கிழக்கு நோக்கி வீசும் இரு காற்று அலைகள் தான் எனவும், 12 மற்றும் 14ம் தேதிகளில் மிக கனமழை அல்லது மிக மிக கனமழை வெளுத்து வாங்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு தீபாவளி அன்று ‘ஆரஞ்சு அலெர்ட்’ (மிக கனமழை எச்சரிக்கை) மற்றும் 11, 13 மற்றும் 15ம் தேதிகளில் ‘மஞ்சள் அலெர்ட்’ (கனமழை எச்சரிக்கை) விடப்பட்டு உள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனால் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலை தொடங்கிய பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.