நடிகர் சுஷாந்த் மரணத்தைத் தொடர்ந்து பாக்கர், இச்சார் தர்லா பக்கா போன்ற படங்களில் நடித்திருந்த மராத்தி நடிகர் அசுதோஷ் பக்ரே தற்கொலை செய்து கொண்டார்.
மராத்திய நடிகர்
பிரபல நடிகராக வளர்ந்து வரும் நடிகரான இவர் மராத்வாடாவில், நந்தேடு நகரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்த் உள்ளனர். புதன்கிழமை பிற்பகல் நந்தேட்டின் கணேஷ் நகர் பகுதியில் உள்ள அவரது பிளாட்டில் பக்ரே (32) இறந்து கிடந்தார். முதலில் பார்த்த அவரது பெற்றோர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
நடிகை மயூரி தேஷ்முகின் கணவர்
இவரது மனைவியும் சினிமா உலகைச் சேர்ந்தவர் தான்.ஆம்!!மராத்தி நடிகை மயூரி தேஷ்முகின் கணவர், இந்த அசுதோஷ் பக்ரே. பக்ரே, மராத்தி சீரியல் குல்தா காளி குலேனாவில் நடித்த பிறகு புகழ் பெற்றார். அவர் பகார், இச்சார் தர்லா பக்கா போன்ற மராத்தி படங்களில் நடித்திருந்தார்.
இதையும் பாருங்க ⇛⇛⇛ இந்தியாவில் 24 மணி நேரத்தில் 50,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!!! 10 லட்சம் பேர் குணமடைந்தனர்!!
தற்கொலைக்கு காரணம்
நடிகரின் தற்கொலைக்கு காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதாகவும், அதில் ஒருவர் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார் என்று ஆய்வு செய்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தற்செயலான மரணம்
நந்தேடில் உள்ள சிவாஜி நகர் காவல் நிலையத்தில் தற்செயலான மரண வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
தொடரும் தற்கொலைகள்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மற்றொரு நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.