நாம் அனைவரும் வாழ பழகி இருக்கும், இந்த கொரோனா காலத்தில் வேலைபார்க்கும் அனைவரின், 88 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை பிரதானமாக தேர்ந்தெடுத்து உள்ளனர்.
கொரோனா காலம்:
உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா என்ற கொடிய வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. அதனால், பல செயல் பாடுகளுக்கும் பாதிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக வேலை பார்க்கும் பலரும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். தொடரந்து இந்த நிலை நீடித்து வந்ததால், பல நிறுவனங்களும், தங்களது பணியாளர்களுக்கு, வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்கான வழிவகைகளை ஏற்படடுத்தி தந்தது.
ஒரு லிட்டர் டீசல் 8 ரூபாய் குறைப்பு – மாநில முதல்வர் அதிரடி!!
இதன் மூலமா பலரும் இந்த கொரோனா காலத்திலும் வேலை பார்ப்பதற்கான வழிகள் ஏற்பட்டன. இப்படியான நிலையில், பயண மற்றும் விலைப்பட்டியல் மேலாண்மை தீர்வுகள் வழங்கும் எஸ்ஏபி கான்கூர் தற்போது ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், வீட்டில் இருந்து பணியாற்றும் நபர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
ஆய்வின் முடிவுகள்:
இந்த ஆய்வில் முடிவுகளாக, 88 சதவீதம் பேர் தங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வது நன்றாக உள்ளது என்றும், 39 சதவீதம் பேர் தங்கள் நிறுவனம் இன்னும் மென்பொருளை நன்றாக வடிவமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
மேலும், 22 சதவீதம் பேர் தங்கள் நிறுவனம் தங்களுக்கு ஆகும் செலவுகளுக்கு(மின்கட்டணம், இன்டர்நெட் சேவைகளுக்காக பணம்) பணம் அளித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர். ஆனால், 76 சதவீதம் பி[ஏர் தங்கள் நிறுவனம் இந்த சலுகைகளை செய்வதால் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.