வித்யாசமான கதைக்களம் கொண்ட தமிழ் படம் ” ஓ மை கடவுளே” . இந்த படம் தற்போது டொரோண்டோவில் நடக்க இருக்கும் சர்வதேச விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
” ஓ மை கடவுளே” திரைப்படம்:
கடந்த காதலர் தினத்தன்று வெளியான திரைப்படம் தான் ” ஓ மை கடவுளே” திரைப்படம். இது ஒரு வித்யாசமான கதைஅமைப்பில் இருந்ததால் தமிழ் ரசிகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதில், அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும்சிறப்பு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தனர். இந்த படத்தை புது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கினார்.
சர்வதேச அங்கீகாரம்:
இந்த படத்தை பார்த்து விட்டு தெலுங்கு திரையுலகின் பிரபல கதாநாயகன் மகேஷ் பாபு பாராட்டி இருந்தார். இப்படியாக இருக்க, சர்வதேச படவிழாவில் இந்த படத்தை திரையிட தேர்ந்தெடுத்துள்ளனர். ஏற்கனவே, தெனிந்தியா படங்களான, ஜெர்ஸி, ட்ரான்ஸ் மற்றும் கைதி தேர்வு செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த படமும் தேர்வாகி உள்ளது, படக்குழுவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் நெகிழ்ச்சி:
Okay guys !! First film first international recognition !! Very content ! Congrats to my entire team of cast and crew !! 🙂 thanks to the audience !! 🙂 pic.twitter.com/CZtaiiGS0h
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) August 4, 2020
இத படம் தேர்வானத்தை அடுத்து, இந்த படத்தின் இயக்குனர், அஸ்வத் மாரிமுத்து தனது ட்விட்டர் பகதிதில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டதாவது ” முதல் படம், முதல் சர்வதேச அங்கீகாரம். மிகவ்வும் பெருமையாக உள்ளது. படக்குழுவினருக்கு எனது நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.