வங்கக்கடலில் உருவான தீவிரமான நிவர் புயல் புதுசேரி மற்றும் மரக்காணம் இடையே, நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. முக்கியமாக சென்னை தாம்பரத்தில் 31.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு சில பகுதிகள் வெள்ளத்தினால் சூழப்பட்டது.
நிவர் புயல்:
வங்கக் கடலில் உருவான நிவர் புயல், புதுச்சேரி அருகே அதி தீவிர புயலாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் கரையை கடந்து முடிந்தாலும் மழை குறையவில்லை. பல பகுதிகளில் மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது. புயலினால் பெரிய அளவில் உயிர் சேதம் எதுவும் இல்லை. ஆனால் குடியிருப்பு பகுதிகளில் மட்டும் வெள்ளம் சூழ்ந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில், விழுப்புரத்தில் 28 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலூரில் 27.5 செ.மீ மழை பதிவாகியது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. சென்னையில் உள்ள தாம்பரத்தில் 31.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
புயல் கரையை கடந்தாலும், வேலுர், ராணிபேட்டை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் இன்னும் தமிழக பகுதியிலேயே இருக்கிறது எனவே மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரை யாரும் தேவையின்றி வெளியே செல்லவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.