கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு டிசம்பர் 31ம் தேதி வரை தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது. கொரோனா 2வது அலை பல மாநிலங்களில் தொடங்கி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிறப்பு அனுமதி பெற்ற விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.