தனத்திடம் ஒட்டிக்கொள்ளும் ஜீவாவின் குழந்தை – ஏக்கத்தில் மீனா!! சூடுபிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் குழந்தையை அழைத்து கொண்டு வீட்டிற்கு வரும் மீனா வழக்கம் போல பல பிரச்சனைகளை இழுக்கிறார்.

பாண்டியன் ஸ்டார்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ன தான் சுவாரசியம் இல்லாமல் ஒளிபரப்பானாலும் பல ட்விஸ்ட்டுகளை வைத்துள்ளனர். ஏனெனில் வீட்டிற்கு வரும் மீனா இங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் எரிச்சலும் அடைந்தார். மேலும் தனத்திற்கு அடிக்கடி மயக்கம், வாந்தி என ஏற்படுகிறது. இதனை வைத்து பார்க்கும்போது தனம் மாசமாக இருக்கிறாரோ என்று ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஜீவாவின் அம்மா குழந்தையை பாண்டியம்மா என்று அழைப்பதற்கு வேறு மீனா கோவப்படுகிறார். மேலும் இன்றைய எபிசோடில் ஜீவாவும் மீனாவும் தூங்க செல்ல ஜீவாவின் அம்மா ஜீவாவை வெளியே படுக்க சொல்லி தனத்திடம் கூறுகிறார். இதனை தனம் செய்ய மாட்டேன் என்று சொல்ல அவரை திட்டி உள்ளே அனுப்புகிறார்.

இதற்கிடையில் கதிர் முல்லை நீண்ட நேரம் பேசிகொண்டுள்ளனர். அதன் பிறகு மீனாவின் ரூமிற்கு செல்லும் தனம் ஜீவாவை வெளியே படுக்க சொல்ல அதற்கும் மீனா கடுப்பாகிறார். தனம் கீழே படுத்துக் கொள்வதாக சொல்கிறார். சரி என்று தூங்குகின்றனர்.

வெளியே சத்தியமூர்த்தி, கண்ணன் மற்றும் ஜீவா தூங்குகின்றனர். வழக்கம் போல கண்ணன் காமெடி என்ற பெயரில் மொக்கை போட்டுகொண்டுள்ளார். இதற்கிடையில் உள்ளே திடீரென மீனாவின் குழந்தை அழுகிறது. சிறிது நேரம் தூக்கி வைத்திருக்க அப்பொழுதும் அழுகையை நிறுத்தவில்லை.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு மீனா குழந்தைக்கு பால் கொடுக்க குழந்தை பாலையும் குடிக்கவில்லை. கடைசியில் அனைவரும் வந்து விட குழந்தை அழுவதை நிறுத்தவே இல்லை. இதனால் மீனாவும் அழுக ஆரம்பிக்கிறார். தன் வீட்டில் இருந்தவரை குழந்தைக்கு இந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை என்றும் கூறுகிறார்.

ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லலாம் என்று முடிவெடுக்க அப்பொழுது கண்ணன் வந்து குழந்தையிடம் பேசியதும் குழந்தை அழுகையை நிறுத்துகிறது. விளையாட்டு பொருளை காட்டி குழந்தையை சமாதானம் செய்கின்றனர். அதன் பிறகு குழந்தைக்கு தூக்கம் வர குழந்தையை அழைத்து கொண்டு ரூமிற்கு செல்கிறார்.

திரும்பவும் குழந்தை அழுக ஆரம்பிக்கிறது. குழந்தை மீனாவிடமும் செல்லாமல் தனத்தின் மடியில் படுத்ததும் அமைதியாகிறது. இதை பார்த்ததும் மீனா அதிர்ச்சியடைகிறார். போறபோக்கை வைத்து பார்க்கும்போது குழந்தைக்காக இந்த வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here