பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் ஒரு புதுவரவு – ஆர்வத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியின் பிரபலமான தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீண்டுமாக ஒரு புது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடககுழு.

பாண்டியன் ஸ்டோர்ஸ் புதுவரவு

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பொதுவான சீரியல் போல் இல்லாது பல புது கதைகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சித்ரா தற்கொலைக்கு பிறகு இந்த தொடர் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. ஏனென்றால் கதிர் முல்லை கதாபாத்திரத்துக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தார்கள்.

அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதல் கட்டணம் – கடலூரில் 45வது நாளாக மாணவர்கள் போராட்டம்!!

தொடர்ந்து முல்லை கதாப்பாத்திரத்திற்கு பராதி கண்ணம்மா தொடரின் அறிவுமணியாக நடித்துவந்த காவ்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடரில் தற்போது காதல் காட்சிகளுக்கெல்லாம் ஓய்வு கொடுத்து தற்போது சண்டை காட்சிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்திற்கு அத்தையாக ஒரு புதுவரவை அறிமுகப்படுத்தியிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இதனால் இத்தொடர் மேலும் அதிகமான சண்டை காட்சிகளுடன் நகரப்போகிறது என தெரிவித்துள்ளனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here