நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் மற்றும் தற்போது இவர் புதிதாக ரஜினியுடன் இணைந்துள்ள படத்திற்குமான வேலைகளை கவனிப்பதற்காக மயிலாப்பூர் மற்றும் போயஸ் கார்டனில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
பிஸியாக இருக்கும் நெல்சன்
தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் விஜய்யை வைத்து பீஸ்ட் எனும் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். படப்பிடிப்புகள் அனைத்துமே முழுவதுமாக முடிவடைந்து தற்போது ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பட வேலைகளை கவனிப்பதற்காக மட்டுமே நெல்சன் மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்கங்களில் வெளியாக இருப்பதால் வெகு விமர்சையாக பட வேலைகளை கவனித்து கொண்டிருக்கிறார்.
பீஸ்ட் திரைப்படத்தினை தொடர்ந்து நெல்சன் ரஜினியை வைத்து அடுத்து படம் இயக்கவுள்ளார். இந்த திரைப்பட வேலைகளையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறார். இந்த திரைப்பட வேலைகளை கவனிப்பதற்காக போயஸ் கார்டனில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். மயிலாப்பூரில் இருக்கும் வீடும் போயஸ் கார்டனில் இருக்கும் வீடும் சற்று நெருக்கத்தில் உள்ளதால் மாற்றி மாற்றி இரண்டு பட வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டு இருக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்