தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் திருமணம் எப்பொழுது என்று பலரும் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தற்போது அது பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நயன்தாரா
‘ஐயா’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக்கொண்டுள்ளார் நயன்தாரா. தொடர்ந்து தனது விட முயற்சியால் பல வெற்றிகளை பார்த்து வருகிறார். மேலும் எத்தனை விதமான சர்ச்சைகளில் சிக்கினாலும் எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது கேரியரிலேயே கவனமும் செலுத்தி வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நயன்தாராவை வைத்து தான் தொடர்ந்து பல கிசுகிசுக்கள் வெளியாகின. ஆரம்பத்தில் சிம்புவும் நயன்தாராவும் காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்ததாக சொல்லப்பட்டது. மேலும் பிரபு தேவா மாஸ்டருடன் லிவ்விங் ரிலேஷனில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இவ்வாறு பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். ஒரு கட்டத்தில் தனக்கு எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார் நயன்தாரா. அப்பொழுது தான் ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியானது.
பிரபல இயக்குனர்களுடன் கூட்டணி சேரும் நடிகர் ரஜினி – இணையத்தில் வைரலாகும் தகவல்!!
இந்த படத்திற்கு பிறகு நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனிற்கும் இடையே நல்ல நடப்பு ஏற்பட அது தற்போது காதலாக மலர்ந்துள்ளது. இவர்களின் திருமணம் எப்பொழுது பல பலரும் கேட்டு ஓய்ந்த நிலையில் நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு விக்னேஷ் சிவனுக்கு எதோ அட்வைஸ் செய்ததாக செய்திகள் பரவி வருகிறது. அதாவது நயன்தாரா மிகவும் நல்லபெண் விரைவில் திருமணம் செய்துகொள் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் சிம்பு ‘போடா போடி’ திரைப்படத்தின் போதே நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.