பிரபல இயக்குனர்களுடன் கூட்டணி சேரும் நடிகர் ரஜினி – இணையத்தில் வைரலாகும் தகவல்!!

0

‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், நடிகர் ரஜினி தனது அடுத்த படத்தில் பிரபல இயக்குனருடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா காரணமாக பாதிலேயே நிறுத்தப்பட்டிருந்த ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் துவங்கியது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப்பட உள்ளது. முன்னதாக ‘அண்ணாத்த’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு இடைக்கால தடை நீக்கம் – ஐகோர்ட் அறிவிப்பு!!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் கதை ரஜினிக்கு பிடித்துள்ளதாம். மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதையும் ரஜினிக்கு பிடித்துள்ளதாம்.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். அதனால் அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை, இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் கதையில் நடித்து விட்டு, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கலாம் என ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here