உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவல் காரணமாக மொத்தம் 16.8 கோடி குழந்தைகள் இதுவரை பள்ளிகளுக்கு செல்லவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை துன்புறுத்தி வருகிறது. தற்போது தான் அனைத்து உலக நாட்டிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. மேலும் அனைத்து பகுதிகளிலும் தற்போது கொரோனாவிற்கான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது சில உலக நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் கடந்த கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 10 மாதங்களுக்கு பின்பு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த உலக நாட்டிலும் முழு அளவில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா – பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒத்திவைப்பு!!
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட யுனிசெப் கூறியதாவது, உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் முழு நேர மற்றும் பாதி நேர பள்ளிகள் மூடப்பட்டதால் சுமார் 88.8 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த மாதம் வரை சில உலக நாடுகளில் இன்னும் பள்ளிகள் மூடிக்கிடக்கிறது. இதனால் சுமார் 9.8 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.