கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், முன்னரில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, 40 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், இன்னும் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
நிலச்சரிவு:
கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு அருகே பெட்டிமுடி பகுதியில் நிலைசரிவு ஏற்பட்டது. இதனால், பலரும் மண்ணுக்கடியில் சிக்கி உயர் இழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 40 பேர் உயிர் இழந்து இருந்தனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
‘எடப்படியார் என்றும் முதல்வர்’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்!!
பிழைப்புக்காக, கேரளா மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர். அங்கு இருக்கும் கண்ணன் தேவன் நிறுவனத்தின் கண்ணக்கு படி 83 பேர் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் வரை 43 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்களின் நிலை:
இதனை அடுத்து, இன்னும் 28 பேரின் நிலை தெரியாமல் இருந்துவந்ததது. மீட்பு குழு கணக்கீட்டின் படி அவர்களும் மண்ணுக்கடியில் புதைந்து போய் இருக்கலாம் என்று கூறப்பட்டது. நேற்று முன் தினம் 4 வது நாளாக மீட்புப்பணி நடந்தது. கடும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், தேடுதல் வேட்டையில் இறங்கினர், மீட்புப்பணியினர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த நிலை, மேலும் 6 உடல்கள் அழுகிய நிலையில் ஆற்றில் கரை ஒதுங்கி உள்ளது. இதன் மூலமாக பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. அழுகிய நிலையில் இருந்ததால், ஆள் யார் என்று அடையாளம் காண முடியாததால், பிரதே பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சடலங்கள் கொடுக்கபட்டுள்ளன. இன்னும் 21 பேரின் நிலை பற்றி தெரியாததால், இன்றும் மீட்பு பணிகள் நடக்கவுள்ளன.