ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்துக்களில் சமபங்கு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை பிறப்பித்து உள்ளது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சொத்துரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
சமபங்கு சொத்து:
இந்தியாவில் 2005ம் ஆண்டு வரை முன்னர் வரை இந்து வாரிசு உரிமை சட்டத்தில் பெற்றோர்களின் சொத்தில் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே உரிமை உண்டு என இருந்தது. இது 2005ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டு பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல தரப்பினர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கில் இன்று பெண்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை – மத்திய உயர்கல்வித்துறை தகவல்!!
பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு குறித்த வழக்கு இன்று நீதிபதி அருண் மிஸ்ரா அவர்களின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில் 2005 ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்தம் செல்லும் எனவும் பெற்றோர்களின் சொத்தில் ஆண் பிள்ளைகளைப் போன்று, பெண் பிள்ளைகளுக்கும் சம பங்கு உண்டு என அதிரடி தீர்ப்பினை பிறப்பித்து உள்ளனர்.
Good Order of Judgement
That Equal distribution of Properties Son and daughter
Wishing Happy Krishna Jayanthi Festival
@
Prabhakaran
MA.Public Administration.
M.COM.
Post Graduate Public Relation
Post Graduate Office Mangt
Dpl Computer.
Ph.D(F) Mangt
Global Politicen