வெறும் இரண்டு பவுன் தங்க நகைக்காக கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆன பெண்ணை எதிர் வீட்டில் இருந்தவர்கள் கொலை செய்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நகைக்காக கொலை:
சிவகாசி மாவட்டத்தில் உள்ள அலமரத்துப்பட்டியை சேர்ந்தவர், செல்வமணிகண்டன். இவர் ஒரு பட்டாசு தொழிலாளி. இவருக்கு கடந்த மாதம் திருத்தங்கள் பகுதியை சேர்ந்த பிரகதிமோனிகா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி செல்வமங்கண்டான் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அப்போது, தனது மனைவியிடம் 1 மணி அளவு பேசியுள்ளார். வீட்டில் தனியாக தான் மோனிகா இருந்துள்ளார். ஒரு 2 மணியளவில் மோனிகா கை கால்கள் வெட்டப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் விசாரணை:
இதனால், போலீசாருக்கு உடனடியாக புகார் தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திலேயே விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரை எஸ்.பி சுஜித்குமார், விருதுநகர் ஏடிஎஸ்பி மாரிராஜன், சிவகாசி டிஎஸ்பி பிரபாகரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
மூணாறு நிலச்சரிவில் மேலும் 6 உடல்கள் மீட்பு – பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!!
அதில், இவர்களது பகுதியை சேர்ந்த கோடீஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து இந்த படுகொலையை செய்துள்ளது தெரிகிறது. அவர்கள் மோனிகாவிடம் இருக்கும் நகைக்காக தான் படுகொலை செய்தனர் என்று தெரிகிறது.
மேலும், இந்த இருவரிடமும் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.