தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் – 7.63 கோடி ரூபாய் அபராதம் வசூல்..!

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 7.63 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஊரடங்கு விதிமீறல்:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உட்பட நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவும் அமலில் உள்ள நிலையில் பலரும் அதனை மீறி வெளியே செல்கின்றனர். அவர்களை கைது செய்யும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை 5,26,507 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் 4,94,770 வழக்குகள் ஊரடங்கை மீறியதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 4,20,688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 7.63 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here