4 தடுப்பூசி மருந்துகள் 5 மாதங்களில் பரிசோதனை – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்..!

0

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் பரிசோதனை கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

பாஜக மூத்த தலைவர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் உடன் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைதளம் மூலம் உரையாடலில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஹர்ஷ்வர்தன் அவர்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து சில தகவல்களை வெளியிட்டு உள்ளார். அதில் கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் 100 தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட சோதனையில் உள்ளது. இந்தியாவிலும் அதேபோல் 14 தடுப்பூசி மருந்துகள் பரிசோதனைக்கு வந்துள்ளது. அதில் 4 மருந்துகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் பரிசோதனைக்கு வரும் என தெரிவித்து உள்ளார்.

தடுப்பூசி உருவாக்கும் செயல்முறை நீண்ட காலம் எடுக்கும் என்பதால், கொரோனா வைரஸிற்கு விரைவில் தடுப்பூசி கண்டுபிடிப்பது என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். எந்த ஒரு வைரஸிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது 1 வருடம் ஆகும். எனவே தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வரை மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துவது மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here