இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில் தனது அம்மாவைக் காண 5 வயது சிறுவன் பெங்களுருவில் இருந்து டெல்லிக்கு தனியாக பயணம் செய்து வந்துள்ளான்.
சிறுவன் பயணம்:
இந்தியாவில் 60 நாட்களுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டது. கொரோனவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் விஹான் சர்மா என்கிற 5 வயது சிறுவன் டெல்லியில் சிக்கிக்கொண்டு இருந்துள்ளான். அந்த சிறுவனது பெற்றோர் பெங்களுருவில் வசித்து வருகின்றனர். இன்று விமான சேவை தொடங்கப்பட்டதால் சிறப்பு பிரிவில் கீழ் அச்சிறுவன் டெல்லியில் இருந்து மாஸ்க் மற்றும் கையுறை அணிந்தபடி தனியாக பயணம் செய்து வந்துள்ளான்.
இது தொடர்பாக சிறுவனின் தாய், 3 மாதத்திற்கு பின் தனது பிள்ளையை சந்திப்பதாகவும், இதற்காக எனது 5 வயது மகன் டெல்லியில் இருந்து தனியாக வந்ததாக தெரிவித்தார். அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |