தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் பிரணிதா சுபாஷ் தனக்கு அந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசை என தெரிவித்து உள்ளார்.
நடிகை பிரணிதா:
தமிழில் மாஸ், சகுனி, உதயன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், என்னுடைய அப்பா, அம்மா என இருவருமே டாக்டர்கள். அதனால் என்னையும் டாக்டராக்க ஆசைப்பட்டனர். ஆனால் எனக்கு நடிகை ஆக வேண்டும் என்பதில் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. எனக்கு சினிமா வாய்ப்புகள் வந்தபொழுது பெற்றோர்கள் எதிர்த்தனர்.
பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த காரணத்தினால் என்னை என் போக்கில் விட்டு விட்டனர். டாக்டர் ஆகாமல் நடிகை ஆனதற்கு எனக்கு பெருமையாக உள்ளது. பல விதமான கதைகளில் நடித்து அதிலே வாழும் பாக்கியம் நடிகைகளுக்கு தான் கிடைக்கும். எனக்கு சரித்திர கதை கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அதில் சரித்திர காலத்து ஆடை, அணிகலன்கள் அணிந்து நடிப்பதில் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |