தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருபவர்கள், மாஸ்க் அணியாமல் வருபவர்களிடம் இருந்து இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு மீறல்:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் அரசு கூறும் அறிவுரைகளை மீறி தேவையற்ற காரணத்திற்காக வெளியே வருபவர்களை கைது செய்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் இதுவரை ரூ. 10.44 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
‘ஒளிரும் தமிழ்நாடு’ – தொழில் மாநாட்டை துவக்கி வைக்கிறார் முதல்வர்..!
அதுமட்டுமின்றி இதுவரை ஊரடங்கை மீறியதற்காக 5,89,744 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். 4,50,479 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக 5,48,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை குறிப்பிட்ட தேதியில் காவல் நிலையத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என காவல்துறை அறிவித்து உள்ளது.