தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற தகவலை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்து உள்ளார்.
பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தள்ளிவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஹால் டிக்கெட் விநியோகமும் முடிந்து விட்டது. தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட வாய்ப்புகள் இல்லை கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு மீறல் – 5 லட்சம் பேரை கைது செய்த போலீசார்..!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு முடிந்து வீட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். மேலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 3வது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்து உள்ளார். கொரோனா தாக்கம் உள்ள சூழலில் பள்ளிகள் திறக்கப்படும் வரை, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சரியான வழி எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.