ஒரே நாளில் 12,881 பேருக்கு தொற்று உறுதி – இந்தியாவில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிர்பலி..!

0
corona virus cases in india
corona virus cases in india

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் புது உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜூன் மாத இறுதியில் உச்சத்தை அடையும் என ஐசிஎம்ஆர் எச்சரித்து உள்ளது. கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்துக் கொண்டு வருவதை, அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கை தெளிவாக காட்டுகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 334 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 12,237 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3.66 லட்சத்தை தாண்டி உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Corona update
Corona update

இந்தியாவில் இதுவரை 1,94,325 பேர் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1,16,752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 5,651 பேர் உயிரிழந்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 50,193 பேருக்கும், டெல்லியில் 47,102 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here