திமுக தென்மண்டல அமைப்பு செயலளராக இருந்த மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவது பற்றி வரும் 20 ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது பா.ஜ.கவில் இணைவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
முக அழகிரி:
தி.மு.க.,வின் மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இவர் தென்மண்டல அமைப்பு செயலாளராகவும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார். பின்பு இவரை சில காரணத்திற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சில காலம் ஆட்சியில் இல்லாத இவர் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தனிக்கட்சி தொடங்குவது குறித்த ஆலோசனையை வரும் 20 ஆம் தேதி நடத்த உள்ளார். கருணாநிதியின் மறைவுக்கு பின் அவர்க்கு கீழ் ஸ்டாலின் அக்கட்சியை நடத்தி வருகிறார். மு.க.அழகிரி ஸ்டாலின் உடன் கட்சி ஆரம்பிக்க முற்பட்டார் ஆனால் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை.
விளக்கம்
மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவது பற்றி வரும் நவ.20 ஆம் தேதி மதுரையில் ஆலோசனை நடத்த உள்ளார். தனிக்கட்சி கருணாநிதியின் பெயரில் தொடங்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். தமிழ்நாடு வர உள்ள அமித்ஷாவை மு.க.அழகிரி சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்றும் கூறியுள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் அவர் கூறியதில், தனிக்கட்சி தொடங்குவது குறித்தும், பா.ஜ.கவில் இணைவதும் குறித்தும் தான் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. பா.ஜ.கவின் தலைவர் எல்.முருகன் “பா.ஜ.க விற்கு வந்தால் வரவேற்போம்” என்பது அவர் கூறிய கருத்து. மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் கலந்தோசித்து விரைவில் நல்ல முடிவை எடுப்பேன் என்று செய்தியாளரிடம் கூறியுள்ளார்.