தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என முதல்வர் அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளனர்.
ஊரடங்கு நீட்டிப்பா?
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாளையுடன் (ஜூன் 30) ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் அதனை மீண்டும் நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்பது குறித்து மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவினர், அரசுக்கு வழங்கிய பரிந்துரைகள் குறித்து தெரிவித்து உள்ளனர்.
- தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை என மருத்துவக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
- சென்னையில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவரது குடும்பத்தில் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர்.
- கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை மேலும் தற்போது உள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
- இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகப்படியான பரிசோதனைகள் (11 லட்சத்திற்கும் மேல்) செய்யப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் 80% பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தான் கொரோனா தொற்று இருப்பதால் அச்சப்பட தேவையில்லை. இறப்பு விகிதம் தமிழகத்தில் மிக குறைவாக இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
- திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.