சேலம் அருகே சுங்கச்சாவடியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜுனனை போலீசார் நிறுத்தி விசாரித்த போது தகராறு ஏற்பட்ட நிலையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை காலால் உதைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அத்துமீறல்..!
சேலம் அழகாபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் தர்மபுரி தொகுதி எம்.பி-ஆக ஒருமுறையும், தாரமங்கலம் தொகுதியில் எம்.எல்.ஏ ஆக இரண்டு முறையும் வகித்து வந்தவர்.
இந்நிலையில் சேலம் அருகே ஓமலூர் சுங்கச்சாவடியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களை விசாரணை செய்து கொண்டிருந்தபோது அப்போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜுனன் வந்த காரை தடுத்தி நிறுத்திய போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
வைரலாகும் வீடியோ..!
இதனால் கோபம் அடைந்த அர்ஜுனன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதால் போலீசார் அவரை எச்சரித்தனர். இதனால் மேலும் கோபமடைந்த அவர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷை காலால் எட்டி உதைத்துள்ளார்.இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. காலால் எட்டி உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனாவை விட கொடிய வைரஸ் இந்தியாவில் பரவலா..? – வைரலாகும் தகவல்..!
இசசம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.