இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 4 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் 3 பேர்க்கு கொரோனா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடைகள் இயங்காது..!
தமிழக அரசு ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மார்ச் 31 வரை விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. மக்கள் அதிகளவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறித்த மீனுடன் விசேஷ உணவு – கேரளாவில் ருசிகரம்..!
இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் வணிக வளாகங்கள், வாரந்தோறும் நடைபெறும் காய்கறி சந்தைகள், பெரிய நகை மற்றும் ஜவுளிக்கடைகள் ஆகியவற்றை நாளை முதல் வரும் மார்ச் 31 வரை இயங்கக்கூடாது என புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |