மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் மோதல் – வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சூப்பர் ஸ்டாருடன் சேரும் உலகநாயகன் கமல் - விக்ரம் ரிலீசுக்கு பின் இணையும் அதிரடி காம்போ!!
சூப்பர் ஸ்டாருடன் சேரும் உலகநாயகன் கமல் - விக்ரம் ரிலீசுக்கு பின் இணையும் அதிரடி காம்போ!!

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தேர்தலுக்கான பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது அவர் கட்சியில் இருக்கும் தலைவர்களுக்கு இடையே பிரச்சனைகள் நிலவி வருவது போல் தெரிகிறது. மேலும் இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம்:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை துவங்கியள்ளனர். மேலும் வர போகும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். மேலும் அதற்கான பிரச்சாரத்தையும் துவக்கி உள்ளார். மேலும் இவர் ஆட்சிக்கு வந்தால் பல நல்ல திட்டங்களை அமல்படுத்த போவதாகவும் அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மாற்றத்திற்கு தமிழகம் தயாராக உள்ளது என்றும் கூறிவருகிறார். புதுச்சேரி மாநிலத்தில் இவருக்கு டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் இவருக்கு இன்னும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதனால் தொடக்கத்திலே இவருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது என்று பலர் கூறி வருகின்றனர். மேலும் தற்போது அரசியலில் இருந்து ரஜினி விலகப்போவதாக அறிவித்துள்ளார். இதனை குறித்து கமல் ரஜினியை நேரில் சந்தித்து தனது கட்சி ஆதரவு கேக்கபோவதாக கூறியுள்ளார்.

கட்சிக்குள் ஏற்போடும் பிரச்சனைகள்:

இப்படி பரபரப்பாக போகிக்கொண்டிருக்கும் அரசியல் சூழலில், கமலுக்கு புதிதாக ஓர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கமல் தனது கட்சியில் படித்தவர்கள், செல்வாக்கு உடையவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்ற தகுதியானவர்களுக்கு தனது கட்சியில் பதவி அளித்து வருகின்றார். மிகவும் கவனமாக இந்த பணிகளை செய்து வருகிறார்.

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை – கவலையில் நகைப்பிரியர்கள்

சில தினங்களுக்கு முன்பு கட்சியின் பொது செயலாளராக இருந்த அருணாச்சலம் திடிரென்று பாஜக கட்சிக்கு மாறியுள்ளார். இதற்கு காரணம் என்னவென்று அனைவராலும் ஆராயப்பட்டு வந்தது. தற்போது சிலர், “மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளர் பதவியை கட்சியில் புதிதாக இணைந்த முன்னாள் இ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபுவிற்கு கமல் வழங்கினார். இதை பிடிக்காமல் தான் அருணாச்சலம் கட்சியிலிருந்து விலகியுள்ளார்” என்று கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here