தமிழ்நாட்டையே உலுக்கிப்போட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். ஒருவரும் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது என திமுக தலைவர் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும் மூவர் கைது
கடந்த 2019 ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடை பெற்ற பாலியல் வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பாலியல் வழக்கில் அரசியல் வட்டாரத்தை சேர்ந்த குற்றவாளிகள் உண்டு என்பதை விசாரணையில் கண்டுபிடித்தனர் போலீசார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு திடீர் திருப்பமாக அதிமுகவை சேர்ந்த பிரமுகர் உள்பட மேலும் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளாகிய அருளானந்தம், ஹேரன் பால், பாபு உட்பட மூவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்டாலின் ட்வீட்:
இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் “ஆறேழு ஆண்டுகளாக பல பெண்களை சீரழித்துவந்த பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அதிமுக மாணவரணி செயலாளர் மற்றும் அவர் கூட்டாளிகளை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்”
ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்குள் விட மாட்டேன்’ – டிரம்ப் அதிரடி பேட்டி!!
“பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடைய தமது கட்சியினரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு காத்துவருகிறது. தமிழ்நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து அதிமுக பிரமுகர் உட்பட யாரையும் தப்பவிட கூடாது. அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.