ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக அனைத்து அணி வீரர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ராஞ்சியில் கொரோன பரிசோதனை மேற்கொண்டார்.
கொரோனா அச்சுறுத்தல்:
கடந்த சில மாதங்களாக கொரோனா அதிகரித்து வந்தது. இதனால், பாதிக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கு என்று கூட எதுவும் இல்லாததால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்க பட்டனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனால், ஐபிஎல் அமைப்பும் கண்டிப்பாக போட்டிகளை நடத்த திட்டமிட்டது. அதனால், கொரோனா பாதிக்காத நாடான அரபு நாட்டை தேர்வு செய்து இருந்தது.
கொரோனா பரிசோதனை:
ஆனால், பி.சி.சி.ஐ சார்பில் பல விதிமுறைகள் கூறப்பட்டன. அதில், ஒன்று தான் விளையாட இருக்கும் வீரர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதுவும் 4 முறை பரிசோதனை செய்த பிறகே அவர்கள் விளையாட அனுமதிக்கபடுவர் என்று கூறப்பட்டது. இதனை அடுத்து அனைத்து வீரர்களும் பரிசோதனை மேற்கொள்ள இருந்தனர்.
தோனி பரிசோதனை:
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ராஞ்சியில் தனது முதல் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத தோனி இந்த ஐபிஎல் தொடருக்காக கடமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு – மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!!
இவர் எடுத்து இருக்கும் கொரோனவிற்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மருத்துவர்கள் அவரது வீட்டிற்கு சென்று தான் மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
இந்த பரிசோதனை முடிவுகள் தெரிந்த பின் தான் தோனி போட்டிகளில் விளையாட களம் இருங்குவர் என்று எதிர்பார்க்கபடுகிறது.