இந்தியாவில் மே 31 உடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு 5.0 அறிவிப்பை பிரதமர் மோடி அவர்கள் மன்கிபாத் உரையில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு 5.0
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. வரும் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை அடையும் என ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. இதனால் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கி இதுவரை 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் 3 நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாநில அரசுகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் ஆலோசனை நடத்த வாய்ப்பிருக்காது என கூறப்படுகிறது. மாநில அரசுகள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இதுவரை 1.58 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 70% பேர் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா போன்ற மெட்ரோ மற்றும் சில முக்கிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் அடுத்தகட்ட ஊரடங்கு 5.0 நடவடிக்கையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களுக்கு மட்டும் ஊரடங்கை சில தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி அவர்கள் மன்கிபாத் உரையில் அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |