கடந்த டி.என்.பி.எஸ்.சி நடந்த முறைகேட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரித்தபோது இடைத்தரகளும் தேர்வர்களும் சிக்கினர். இதனால் தேர்வர்கள் தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தங்களிடம் தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலி ஒன்றை உருவாக்க டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்து, நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் நடந்த மோசடையில் பல இடைத்தரகர்கள் சிக்கினர். எனவே இனி நடைபெறும் அனைத்து புதிய திருத்தங்களுடன் சிறப்பாக நடக்கும், தேர்வர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
செல்போன் செயலி
தேர்வர்கள் தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தங்களிடம் தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலி ஒன்றை உருவாக்க டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது.
அதில் ‘தேர்வர்கள் குறைகள், புகார்களை தேர்வாணையத்துக்கு தெரிவிக்க அனைத்து வகை செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்யும் வகையில் செல்போன் செயலியை உருவாக்க தகுதியுடைய நிறுவனங்கள் அடுத்த மாதம் ஜூன் 22-ந்தேதிக்குள் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்கலாம்’ என்று தெரிவித்து இருக்கிறது. அதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |