பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரிக்கு சக போட்டியாளரான சனம் ஷெட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் அவர் “இது எங்களுடைய வெற்றி” என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர்:
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் வாரத்தில் ஆஜித், ரம்யா பாண்டியன், ஆரி, அனிதா சம்பத், வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம், ரேகா, ரியோ, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், ஷிவானி, கேப்ரியலா, அறந்தாங்கி நிஷா, பாலா, சனம் ஷெட்டி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த 16 பேரோடு வைல்ட் கார்டு ரவுண்டில் பாடகி சுசித்ராவும், அர்ச்சனாவும் போட்டியாளர்களாக நுழைந்தனர்.
மீண்டும் உயரத் தொடங்கும் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்!!
பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களால் பெருமளவு விமர்ச்சிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் ரம்யா பாண்டியன், சோம், கேப்ரியலா, ஆரி, பாலா, ரியோ ஆகியோர் இறுதிக்கட்ட போட்டியாளர்களாக தொடர்ந்து விளையாடி வந்தனர். ரசிகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இறுதி போட்டியாளராக ஆரி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் படியாக ஆரி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது குறித்து சக போட்டியாளரும், நடிகையுமான சனம் ஷெட்டி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துளார். தனது இன்ஸ்டாகிராமில் அவர் “இது ஆரியின் நீதி, நேர்மை மற்றும் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி, இது எங்கள் அனைவரின் வெற்றி, உங்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆரியை வெற்றியாளராக தேர்ந்தெடுத்ததற்காக விஜய் டிவிக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.