தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் இயக்கிய சேது, பிதாமகன், நந்தா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் விஜய்யை வைத்து வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நந்தா படத்தின் ஷூட்டிங் போது நடந்த விஷயம் ஒன்று இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது நந்தா படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஈழத்து பெண்ணாக நடிகை லைலா நடித்திருந்தார். ஆனால் அவருக்கு ஈழ தமிழ் ஒழுங்காக பேச வரவில்லையாம். அதனால் பாலா ஷூட்டிங் ஸ்பாட் கூட பார்க்காமல் கண்டபடி திட்டியுள்ளாராம். இதனால் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று ஹோட்டல் ரூமிற்குள் போய் அழுதாராம்.
“நண்பன்” படத்தில் முத்து அண்ணனா?? கடைசில இதான் நடந்துச்சா?? வெளியான ஷாக் தகவல்!!
அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் படுத்தி நடிக்க வைத்தாராம். மொத்தமாக படம் முடித்த பிறகு லைலா பார்த்து ஆச்சரியப்பட்டாராம். அதன் பின்னர் பாலாவின் காலில் விழுந்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,உங்களை புரிந்து கொள்ளாமல் கோப்பட்டு விட்டேன் என்று சொல்லி அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டிருக்கிறார். அதன்படிதான் பாலா அடுத்து இயக்கிய பிதாமகன் படத்தில் லைலாவை நடிக்க கமிட் செய்திருக்கிறார்.