இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை மேற்கொண்டு வருகின்றனர். இன்றளவும் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு, மற்றொரு இணை நோய் தொற்றும் பட்சத்தில், அவர்கள் உயிரிழக்க நேரிடுவதை பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கொரோனா சிகிச்சை பெற்று ஓராண்டு நிறைவுற்ற 14,419 பேரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) தொடர்பு கொண்டு ஆய்வு செய்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதில் 942 பேர் (6.5%) உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஆண்கள் மட்டுமே 616 பேர், இவர்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு, நுரையீரல் பிரச்சினை உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக போக்குவரத்தில் வரப்போகும் புதிய வசதிகள்…, அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் இதோ!!