அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதிய பரிந்துரையின் கீழ் ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை (da hike) மத்திய மற்றும் மாநில அரசுகள் உயர்த்தி வருகின்றனர். இதில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை மத்திய அரசானது கடந்த மார்ச் மாதம் 4%-ஆக அதிகரித்து 38%-திலிருந்து 42%-ஆக உயர்த்தியது. இதனை தொடர்ந்து, மற்ற மாநில அரசுகளும் அடுத்தடுத்து ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை உயர்த்தினர். இதையடுத்து, அரசு ஊழியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
பொதுவாக, அகவிலைப்படி உயர்வானது CPI-IW மற்றும் AICPI குறியீட்டு பொறுத்து தான் உயர்த்தப்படுகிறது. இதில், AICPI குறியீட்டு எண்கள் குறித்த அப்டேட் இன்று அதிகாலை வெளியாகி உள்ளது. இதன்படி, இம்மாத இறுதிக்குள் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அப்டேட்டை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக போக்குவரத்தில் வரப்போகும் புதிய வசதிகள்…, அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் இதோ!!