இந்தியா – சீனா எல்லை லடாக்கில் நடந்த தாக்குதல் பற்றி பேச அனைத்து கட்சியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் பிரதமர் மோடி.சீனா எல்லைமீறி செய்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.எதற்கு அனைத்து கட்சியுடன் ஆலோசனை இதை இப்படி விட்டுவிடக்கூடாது என்பதா இல்லை அடுத்து என செய்வது பேச்சுவார்த்தையா என்று தெரியவில்லை.
நடிகர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் – 8ம் வகுப்பு மாணவனின் காரணம் ?
கொரோனா பரிசோதனைக்கு உரிய கட்டணம் நிர்ணயம் – உச்சநீதிமன்றம் உத்தரவு..!
அனைத்து கட்சியுடன் ஆலோசானை கூட்டம்
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
பிரதமர் மோடி அனைத்து கட்சியுடன் இந்தியா சீனா எல்லை லடாக்கில் நடந்த தாக்குதல் மற்றும் சீன விவகாரம்குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.லடாக் பகுதியில் சீனா எல்லை மீறி நம் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது.இதில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து ஆலோசிப்பதற்க்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.இந்த ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடக்கிறது.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி தலைவர்கள்
மோடி தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, பிஜூ ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன்பட்நாயக், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.