நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டில் நேற்று வெடிகுண்டு இருப்பதாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.இந்த மிரட்டல் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.அதில் வேனும் புரளிஎன தெரிய வந்தது.எனினும் இந்த செயலில் ஈடுபட்ட நபர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வந்து யார் என போலீசார் கண்டுபிடித்தனர்.
சுஷாந்த்துக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது பூனம் ட்வீட்…!
8ம் வகுப்பு மாணவன் விடுத்த மிரட்டல்
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் பள்ளி மாணவன்.இவன் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.அந்த பள்ளி மாணவன் தான் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது என தெரிய வந்தது.இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவன் மற்றும் அவனது தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்பொழுது அவன் தாயார் தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவன்.அதற்க்கு அவன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த மாணவனின் தாயார் போலீசாரிடம் கூறினார்.அவன் கேட்டது கிடைக்காவிட்டால் செல்போனை வைத்து கொண்டு இதுபோல் மிரட்டல் செய்வது மாணவன் வழக்கமாக வைத்துள்ளதும் தெரிய வந்தது.அவனது செல்போனில் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கால்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது.இந்நிலையில் என செய்வது என்று தெரியாமல் அவசர அழைப்பு எண் 108 க்கு அழைத்து மிரட்டல் விடுத்தது விசாரணையில் உறுதியானது. இதனை தொடர்ந்து, பள்ளி மாணவனுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.