பூனம் கவுர் பிரபல தெலுங்கு நடிகை ஆவார். அவர் மீது சில ஊடகங்கள் தேவையில்லாமல் அவதூறு கிளப்பி வருவதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
சுஷாந்த் போல் எனக்கும் இயக்குனர் மிரட்டல்
பூனம் கவுர் தெலுங்கு நடிகையாவார் இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நெஞ்சிருக்கும் வரை எண்ணம் தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழிலும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து, உன்னைப்போல் ஒருவன், வெடி, பயணம், என் வழி தனி வழி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார்.ஹைதராபாத்தில் வசித்து வரும் பூனம். இயக்குனர் பெயரை குறிப்பிடாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளாய் அதில் அவர் கூறியிருப்பதாவது. ஒரு பிரச்சினை குறித்து பேச இயக்குனரை சந்தித்தேன் அவரிடம் எனது கஷ்டத்தை சொல்லி சரிபடுத்த முடியுமா என்று கேட்டேன்.தற்கொலை செய்து கொள்ள தோன்றுகிறது என்றும் கூறினேன். ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை- இந்தியா ராணுவம் அதிரடி…!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
உடனே அந்த இயக்குனர் நீ செத்தால் அது ஒரு நாள் செய்தி என்றார். அந்த பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சினிமா மாபியா அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. அவரால் மன அழுத்தம் ஏற்பட்டது. நடிகைகள் தேர்வு பட்டியலில் இருந்து என்னை நீக்கினார் எனது பட வாய்ப்பை தடுத்தார். அவருக்கு பிடித்தவர்களை மட்டும் நடிக்க வைத்தார். சுஷாந்த் சிங்குக்கு நடந்தது போலவே எனக்கும் நடந்துள்ளது. சிகிச்சை பெறுகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.