சென்னையில் தொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் மக்கள் விலைவாசி உயர்வால் மேலும் பல துயத்திற்கு ஆளாகின்றனர்.
இன்றைய விலை:
இந்தியாவில் நாள்தோறும் சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஊரடங்கு காலத்தில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிந்த பொழுதும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை. 82 நாட்களாக மாற்றம் செய்யப்படாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 7ம் தேதி முதல் தொடர்ந்து 14வது நாளாக உயர்த்தப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
சுவையான மட்டன் கிரேவி – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 45 காசுகள் உயர்த்தப்பட்டு 82.27 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 52 காசுகள் உயர்த்தப்பட்டு 75.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதவாது கடந்த 14 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.73 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 7.07 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.