பிரபல திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் மற்றும் திரைப்பட கதாநாயகி கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் இடையே காதல் வளர்ந்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்:
தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்த கதாநாயகி யார் என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான். இவர் தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. ஆனால் அந்த படத்திற்கு அவர் நடித்த அனைத்து படமும் ஹிட் தான். மேலும் அவர் சினிமாவிற்கு நுழைந்த தொடக்க காலத்திலையே விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் இவரது நடிப்பில் வெளியான மகாநதி திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் அந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறு காலத்திலையே இவரது வளர்ச்சி அனைத்து தரப்பு நடிகைகளுக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவரைப்பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால் இவர் காதல் வலையில் விழுந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பருவமடைந்து விட்டாலே ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளலாம் – மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!
இவரது காதலர் வேறு யாரும் இல்லை இசையமைப்பாளர் அனிருத் தான். இருவரும் காதல் வயப்பட்டுள்ளார்கள் என்று சிலர் கூறிவருகின்றனர். ஆனால் இதனை இரு தரப்பினரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. மேலும் அவர்களை நெருங்கியவர்கள் கீர்த்தி, அனிருத் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறிவருகின்றவனார். தற்போது இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.