எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது – நீதிமன்றத்தில் கங்கனா ரணாவத் மனு!!

0

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சுப்ரீம் கோர்ட்டில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி ஓர் மனுவை தாக்கல் செய்துள்ளார். தற்போது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கங்கனா ரணாவத்:

பிரபல பாலிவுட் நடிகையாக வளம் வருபவர் தான் கங்கனா ரணாவத். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பதிவிட்டு வருவார். இதனால் பல வழக்குகள் இவர் மேல் தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இவரை போல் இவரது சகோதரி ரங்கோலி சந்தேல் இவர் மீதும் பல வழக்குகள் உள்ளன. தற்போது கூட டெல்லியில் நடக்கின்ற விவசாய போராட்டத்திற்காக அமெரிக்க பாப் பாடகி தெரிவித்த கருத்துக்கு மிக கடுமையான தனது பதிலை அளித்தார் கங்கனா ரணாவத்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி அவரது வீட்டின் ஒருபாகத்தை பிடித்தனர். இது சட்டவிரோதமான செயல் என்று உச்ச நீதிமன்ற தெரிவித்தது. தற்போது கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதிரி சுப்ரிம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது, எங்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதற்கு ஆஜராக நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் மஹாராஷ்டிராவில் உள்ள சிவசேனா அரசு தொடர்ந்து தங்களுக்கு மிரட்டல் விட்டு வருகிறது. இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.இதனை கருத்தில் கொண்டு மும்பை நீதிமன்றத்தில் எங்கள் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் சிம்லாவுக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here