காஞ்சீபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கல்குவாரியில் மண் பாறைகள் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். காணாமல் போன 8 பேரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
கல்குவாரியில் விபத்து
காஞ்சிபுரம் அருகே மதூர் என்ற இடத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் கல்குவாரியில் பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்து எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. மலையிலிருந்து சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகள் அங்கிருந்த பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களின் மீது விழுந்தது. அப்போது அங்கு மண் அள்ளும் பணியில் இருந்த பணியாளர்கள் மீது விழுந்ததால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
சம்பவம் நடந்த கல்குவாரிக்கு தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மணிகண்டன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சோனா ஹன்சாரி, சுரேஷ் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#INDvsENG முதல் டெஸ்ட் – டாஸ் வென்று பேட்டிங் செய்யும் இங்கிலாந்து அணி!!
தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும்பணிகள் இன்று காலை 8 மணி முதல் மீண்டுமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி விபத்து நடந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.