பிரச்சாரத்திற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே போனேன் – கமல் ஓபன் டாக்!!

0

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தற்போது தான் பிக் பாஸுக்கு போனேன் என்பதையே வெளிப்படையாக கூறியுள்ளார்.

கமல்ஹாசன்:

தமிழகத்தில் இன்னும் 19 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் வழக்கத்தை விட மாறாக இருக்கும் என்று கூறலாம். காரணம் கொரோனாவிற்கு நடுவே இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்தலில் புது வரவாக கமல்ஹாசன் வந்துள்ளார். அவர் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் இவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று அந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தேர்தலில் இவரது வருகையால், தேர்தல் முடிவுகளில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. மேலும் இவர் மக்களை கவரும் வண்ணத்தில் பல தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக பெண்கள் பயன்பெறும் வகையில் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடவுள்ளார்.

என்னதான் இவர் திரைத்துறையில் இருந்து மக்கள் ஆதரவோடு அரசியலுக்கு வந்தாலும் இவருடன் சேர்ந்தே பல விமர்சனங்களும் வந்து குமிகிறது. அதற்கு முதல் காரணம் இவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பற்றி தமிழக முதல்வரில் இருந்து பல அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் இவர் எப்படியும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் செல்வார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனா?? பிரதமர் இன்று ஆலோசனை!!

தற்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றும் கேவலமில்லை. எனது பிரச்சாரதிற்கான செலவுக்கு அதில் வாங்கும் சம்பளத்தை தான் நான் செலவிடுகிறேன். மேலும் அதுதான் எனது பிரச்சாரத்திற்கு தக்க பலமாக இருக்கிறது என்று அனைவரையும் வாயை மூடும் அளவிக்ரு ஓர் பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here