தற்போது இந்தியாவில் 14 வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. தற்போது நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கவுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல்:
இந்தியாவில் உள்நாட்டு தொடரான ஐபிஎல் போட்டி கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக இந்த தொடர் இந்தியாவில் வைத்து நடைபெறவில்லை. அதற்கு பதிலாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபில் வைத்து இந்த தொடர் நடைபெற்றது. சிறப்பான முறையில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நடத்தியதால் பிசிசிஐக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது கொரோனா பரவலின் வேகம் குறைந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற அதிகவாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அரசு அனுமதியளித்தல் இந்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தை வரும் 18ம் தேதி அன்று நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
சசிகலா நாளை காலை டிஸ்சார்ஜ் – மருத்துவமனை நிர்வாகம் தகவல்!!
ஏப்ரலில் ஐபிஎல்
தற்போது இந்த போட்டி எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் வரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு வரும் ஏப்ரல் மாதம் 2 வது வாரம் ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரலில் தொடங்கி இந்த தொடர் ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.