போலீஸ் எஸ்ஐ மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொடூர கொலை – தூத்துக்குடியில் பரபரப்பு!!

0

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரி சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொலையாளியை பிடிக்க 10 தனிப்படைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல் அதிகாரி கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரவுடி ஒருவனை பிடிக்கச்சென்ற போலீஸ் அதிகாரி நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது நினைவுகூரத்தக்கது. தற்போது அதே போல் ஒரு சம்பவம் தூத்துக்குடியில் நடந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஏரல் காவல் நிலையத்தில் உதவி காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பாலு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் கொற்கையிலுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு குடி போதையில் சுற்றிக்கொண்டிருந்த முருகவேல் என்பவரை கண்டித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் ஒரு சரக்கு வாகனத்தை எடுத்து வந்து அங்கிருந்த காவல் அதிகாரியான பாலு மீது ஏற்றியுள்ளார். இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி பாலு அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்த முருகவேல் என்பவரை பிடிக்க 10 தனிப்படைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here