கொரோனா சிகிச்சை முடிவு பெற்ற நிலையில் சசிகலா நாளை காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக போவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சசிகலா டிஸ்சார்ஜ்
பெங்களூரு அக்ரஹார சிறையிலிருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போதே நான்கு ஆண்டு கால சிறைத்தண்டனை முடித்து ஜனவரி 27 ம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். தற்போது கொரோனா தொற்றிற்கான சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவுள்ளார்.
சனம் ஷெட்டிக்கு திருமணமாகிவிட்டதா?? ரசிகரின் கேள்விக்கு சனம் அளித்த பதில்!!
சசிகலா உடலில் இன்று காலையிலிருந்து நாடித்துடிப்பு, ரத்தத்தின் அளவு சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அவரால் இயற்கையாக சுவாசிக்கமுடிகிறது. சர்க்கரையின் அளவு மட்டும் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து கொரோனா சிகிச்சை இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதனால் நாளை காலை 10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது தான் சிகிச்சை முடிந்திருப்பதால் அவர் உடனடியாக வீடு திரும்பும் சூழல் இல்லாததால் பெங்களூர் – மைசூர் சாலையிலிருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் வரும் 5ம் தேதி வரை தங்கி ஓய்வெடுத்த பின்னரே வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சிறையிலிருக்கும் இளவரசி 5ம் தேதி விடுதலையாகவுள்ளதால் இருவருமாக சென்னைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.