பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்ட சனம் ஷெட்டி நெற்றியில் குங்குமம் வைத்துள்ளது போல வெளியான புகைப்படத்திற்கு திருமணமாகிவிட்டதா என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
சனம் ஷெட்டி பதில்
பிக்பாஸ் சீசன் 4 ல் 18 போட்டியாளர்களுடன் ஒருவராக கலந்துகொண்டவர் நடிகை சனம் ஷெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னும் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை அதிகம் பெற்றவர் சனம் தான். ஆனால் அவர் போட்டியை விட்டு வெளியேறும் முன்பாக அனைத்து மக்கள் மனதிலும் இடம் பிடித்தவராக மாறினார். பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் சரி வெளி இடங்களிலும் சரி அவரது நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்தது போலவே எப்போதும் காணப்படுவார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ரூ.49 ஆயிரத்தை தாண்டும் தூய தங்கத்தின் விலை – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!
இவரை பார்க்கும் எல்லோர் மனதிலும் எழும் ஒரே கேள்வி சனம் ஷெட்டிக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்பது தான். தொடர்ந்து ரசிகர் ஒருவர் சனம் ஷெட்டியிடம் இதே கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு சனம் ஷெட்டி, ‘சிரித்தவாறே, இல்லை. இன்னும் திருமண ஆகவில்லை. உங்கள் எல்லாருடைய ஆசிர்வாதத்தில் ஒரு நாள் திருமணம் நடக்கும். நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து கொள்வது எங்கள் வீட்டில் தடைசெய்யப்பட்டது கிடையாது’ என்று பதிலளித்துள்ளார்.