சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பியதால் படுதோல்வி அடைந்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய வார்னர், பின்ச் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக பின்ச் (114), ஸ்மித் (105), வார்னர் (69) ரன்கள் விளாசினர். பவுலிங்கில் ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் (74) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறியதால் இந்திய அணி, ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஹர்திக் பாண்டியா 90 ரன்கள் அடித்த நிலையில் சம்பா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்த இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.